Thursday, August 26, 2010

இரண்டுவரி கவிதைகள்



இரண்டுவரி கவிதைகள்

காதலுக்கு கண் இல்லை...
கண்ணீர் மட்டும் எப்படி?
***

உன்னை மறந்து நான் தூங்கும்
தூக்கம் என் கல்லறை தான்...

***

நீ காலால் நசுக்கியது ரோஜா இதழை மட்டுமல்ல
என் இதயத்தையும் தான்,...
***

என்னவளை பார்த்ததோ ஒருநாள்
அவளை நினைத்து கொண்டுஇருப்பதோ பலநாள்!!!!

***
என் இதய கோவிலுக்குள் அவள்
தீபம் ஏற்ற வரும் நாள் எப்போது?

***


இப்பூவுலகில் உன்னையே நேசிக்கும்
அன்பு ஜீவன்

***


வண்ணப் பூக்களின் மீது பருவ மொட்டுகள்
என்னவள் முகத்தில் பரு...

***


நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய்...
நான் உன்னை நேசிக்கவே சுவாசிக்கிறேன்!!!

***


தேன் போன்று நினைத்து ஏற்றேன் காதலை,
இன்று அது தேள் போல் கொட்டுகிறது!

***


அழைப்பதற்கு நீஇன்று என் பெயர்
எனக்கே மறைந்து போனதென்றால் நீ நம்புவாயா?

***


எந்த கவிஜனாலும் முடியாது உன்னை போல்
கண்களால் கவிதை எழுத
!!!

***


அப்போது நினைவில் நீ இருந்தாய்
இப்போது நினைவே நீயாக இருக்கிறாய் ...

***


நான் காத்திருக்கிறேன் முதலில் வருவது யார்?
நீயா? மரணமா?

***


உன் நினைவு இல்லாத நாள்
என் "நினைவு நாள் "

***


நிலவு இல்லாத நாட்களுண்டு...ஆனால்
உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை!!!

***


ஆசைப்படுவது அடைவதற்காக ...
அடைய வேண்டும் என்ற துடிப்பு சாதிப்பதற்காக!!!

***


நறுக்க நறுக்க வளரும் நகத்தை போல
உன் நினைவுகள்...

***


காயப்பட்ட நெஞ்சை நேசி ஆனால்
நேசித்த நெஞ்சை காயப்படுத்தாதே...

***


உன் பெயரை கூட நான் அழுத்தி எழுதுவதில்லை
உனக்கு வலிக்குமென்று...

***


காதலியின்கொலுசுசத்தம் கேட்டுபிறந்த கவிதைகள் அவளுடைய மெட்டிசத்தம் கேட்டுஇறந்தன...

***


1 comment:

  1. அனைத்தும் அருமை இந்த கடைசி கவிதை மிகவும் அருமை!

    கவிதை பிரியர்களுக்கான
    தமிழ் கவிதைகள்
    plz Invite friends to visit this Page
    https://m.facebook.com/profile.php?id=1467815643444899&_rdr

    ReplyDelete