Thursday, August 26, 2010

காதல் கவிதைகள்

***ஆயரம் முறை
கண்ணாடியில் பார்த்தேன்1
அவன் என்னை
ஒரு முறை பார்த்ததற்காக!!!

***அன்பு என்ற தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்...
"அம்மா" யென்றேன் உடனே !
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ...என்று !


***கண்ணுக்குள் நீ இருப்பதனால்,
அழுவதற்கு கூட மனமில்லை..
நீ கரைந்து விடுவாய் என்பதால் அல்ல...
கண்ணுட சேர்த்து உன்னையும்
கசக்கி விடுவேனோ ! என்று ...


***என் இதயம் கூட ஒரு வகையில் பூமிதான் !
எப்போதும் உன்னையும், உன் நினைவுகளையும்
சுற்றிக்கொண்டே இருப்பதால் !


***நிமிடங்கள் போனால் என்ன?
நொடிகள் உள்ளது உன்னை நினைத்து வாழ !
நொடிகள் போனால் என்ன ?
என் இதயத்துடிப்பு உள்ளது...உன் நினைவில் வாழ!


***புரியாத அன்பு அருகில்
இருந்தும் பயன் இல்லை...
புரிந்து கொண்ட அன்புக்கு
பிரிவு ஒரு தூரமில்லை!


***நாணயத்தின் ஒரு பக்கம் நீ
மறுபக்கம் நான்...
ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள
முடியாவிட்டாலும் என்றுமே ...இணைந்துருப்போம்...
-காதலுடன் -


***மொட்டுகள் மலராகும்
அது இயற்கை!
முட்கள் மலராகின்றன
உன்னை பார்த்த பின்பு !!!


***அணு அணுவாய்
வாழ்வதற்கு முடிவெடுத்த பிறகு
"காதல்" சரியான வழிதான்...


***உண்மையான அன்புடன் பழகிப்பார்
உன்னுடைய நிழலும்
உன்னுடன் பேச ஆசைப்படும்....


***உன் கண்கள் பார்க்கும்
தொலைவில் நான் இல்லை...
என்று வருத்தப்படதே !
நீ நினைத்து பார்க்கும் அளவில்
உன் இதயத்தில் இருப்பேன் !
எப்போதும் -உனக்காக-


***வான்கொண்ட நிலவிற்கு
மூன்றாம் பிறை மட்டும் அழகு !
நான் கொண்ட காதலிற்கு
நீ மட்டுமல்ல , உன் நிழல் கூட அழகு!


***அழவைப்பது அவள் என்று
தெரிந்தும் அடம் பிடிக்கிறது...
என் கண்கள் ...அவளைத்தான்
காண்பேன் என்று !


***பிரிவை தாங்கமுடியவில்லை !
தயவு செய்து பேசாதே
"உதடுகள்"


***இறப்பதற்கு ஒரு நொடி
துணிச்சல் போதும்...
ஆனால்
வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும் !!!


***பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன் ...
உன்னை பிரிய கூடாது என்று....
பிரியும் போதெல்லாம் நினைக்கின்றேன்
உன்னை ஏன் பார்த்தேன் என்று !!!


***போகும் போதே
ரசித்து விட்டு போ
திரும்பி வந்தால்
இருக்காது
"வாழ்க்கை"


***நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்ணில் கனவுகள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றுமே என் நினைவில்
நீ இருப்பாய் !!!


***உண்மையான அன்பை
புரிந்து கொள்ளும்
ஒரு சந்தர்ப்பம்
"பிரிவு"


***கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை ...
இப்படிக்கு,,
"மெழுகுவர்த்தி"


***உன்னை நேசிக்க ஆரம்பித்த
நிமிடம் எனக்கு தெரியாது..
ஆனால் இனிமேல் வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்!!


***இரவு கண்ட கனவு
மறைந்து போகலாம்
ஆனால்
இதயம் தொட்ட உன் நினைவு
என்றும் மறைவதில்லை
என் இதயத்தில்...


***சாதிக்க நினைப்பவன் மட்டுமே
அதிகம் சோதிக்கபடுகிறான்!
பிறரை அதிகமாக
நேசிப்பவன் மட்டுமே
அதிகம் கயப்படுகிறான்!!!


***ஒரு பொண்ணு அழகாக இருப்பதால்
அவளை நீ
காதலிக்க வில்லை...
நீ காதலிப்பதால் தான்
அவள் அழகாகத் தெரிகிறாள்!!!


***அழகுதான்...
அவள் போட்ட
கோலத்தை விட
அதை சுற்றி இருந்த அவளின்
"பாதசுவடுகள்"



3 comments:

  1. தமிழ் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. கவிதை ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literature_poem என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் கவிதை தொகுப்புகள் அழகாக கொடுக்கப்பட்டிருந்தது.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை!

    கவிதை பிரியர்களுக்கான
    தமிழ் கவிதைகள்
    plz Invite friends to visit this Page
    https://m.facebook.com/profile.php?id=1467815643444899&_rdr

    ReplyDelete
  3. கவிதை தொகுப்பு மிக்க அருமை

    ReplyDelete