Thursday, August 26, 2010

இரண்டுவரி கவிதைகள்



இரண்டுவரி கவிதைகள்

காதலுக்கு கண் இல்லை...
கண்ணீர் மட்டும் எப்படி?
***

உன்னை மறந்து நான் தூங்கும்
தூக்கம் என் கல்லறை தான்...

***

நீ காலால் நசுக்கியது ரோஜா இதழை மட்டுமல்ல
என் இதயத்தையும் தான்,...
***

என்னவளை பார்த்ததோ ஒருநாள்
அவளை நினைத்து கொண்டுஇருப்பதோ பலநாள்!!!!

***
என் இதய கோவிலுக்குள் அவள்
தீபம் ஏற்ற வரும் நாள் எப்போது?

***


இப்பூவுலகில் உன்னையே நேசிக்கும்
அன்பு ஜீவன்

***


வண்ணப் பூக்களின் மீது பருவ மொட்டுகள்
என்னவள் முகத்தில் பரு...

***


நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய்...
நான் உன்னை நேசிக்கவே சுவாசிக்கிறேன்!!!

***


தேன் போன்று நினைத்து ஏற்றேன் காதலை,
இன்று அது தேள் போல் கொட்டுகிறது!

***


அழைப்பதற்கு நீஇன்று என் பெயர்
எனக்கே மறைந்து போனதென்றால் நீ நம்புவாயா?

***


எந்த கவிஜனாலும் முடியாது உன்னை போல்
கண்களால் கவிதை எழுத
!!!

***


அப்போது நினைவில் நீ இருந்தாய்
இப்போது நினைவே நீயாக இருக்கிறாய் ...

***


நான் காத்திருக்கிறேன் முதலில் வருவது யார்?
நீயா? மரணமா?

***


உன் நினைவு இல்லாத நாள்
என் "நினைவு நாள் "

***


நிலவு இல்லாத நாட்களுண்டு...ஆனால்
உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை!!!

***


ஆசைப்படுவது அடைவதற்காக ...
அடைய வேண்டும் என்ற துடிப்பு சாதிப்பதற்காக!!!

***


நறுக்க நறுக்க வளரும் நகத்தை போல
உன் நினைவுகள்...

***


காயப்பட்ட நெஞ்சை நேசி ஆனால்
நேசித்த நெஞ்சை காயப்படுத்தாதே...

***


உன் பெயரை கூட நான் அழுத்தி எழுதுவதில்லை
உனக்கு வலிக்குமென்று...

***


காதலியின்கொலுசுசத்தம் கேட்டுபிறந்த கவிதைகள் அவளுடைய மெட்டிசத்தம் கேட்டுஇறந்தன...

***


காதல் கவிதைகள்

***ஆயரம் முறை
கண்ணாடியில் பார்த்தேன்1
அவன் என்னை
ஒரு முறை பார்த்ததற்காக!!!

***அன்பு என்ற தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்...
"அம்மா" யென்றேன் உடனே !
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ...என்று !


***கண்ணுக்குள் நீ இருப்பதனால்,
அழுவதற்கு கூட மனமில்லை..
நீ கரைந்து விடுவாய் என்பதால் அல்ல...
கண்ணுட சேர்த்து உன்னையும்
கசக்கி விடுவேனோ ! என்று ...


***என் இதயம் கூட ஒரு வகையில் பூமிதான் !
எப்போதும் உன்னையும், உன் நினைவுகளையும்
சுற்றிக்கொண்டே இருப்பதால் !


***நிமிடங்கள் போனால் என்ன?
நொடிகள் உள்ளது உன்னை நினைத்து வாழ !
நொடிகள் போனால் என்ன ?
என் இதயத்துடிப்பு உள்ளது...உன் நினைவில் வாழ!


***புரியாத அன்பு அருகில்
இருந்தும் பயன் இல்லை...
புரிந்து கொண்ட அன்புக்கு
பிரிவு ஒரு தூரமில்லை!


***நாணயத்தின் ஒரு பக்கம் நீ
மறுபக்கம் நான்...
ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள
முடியாவிட்டாலும் என்றுமே ...இணைந்துருப்போம்...
-காதலுடன் -


***மொட்டுகள் மலராகும்
அது இயற்கை!
முட்கள் மலராகின்றன
உன்னை பார்த்த பின்பு !!!


***அணு அணுவாய்
வாழ்வதற்கு முடிவெடுத்த பிறகு
"காதல்" சரியான வழிதான்...


***உண்மையான அன்புடன் பழகிப்பார்
உன்னுடைய நிழலும்
உன்னுடன் பேச ஆசைப்படும்....


***உன் கண்கள் பார்க்கும்
தொலைவில் நான் இல்லை...
என்று வருத்தப்படதே !
நீ நினைத்து பார்க்கும் அளவில்
உன் இதயத்தில் இருப்பேன் !
எப்போதும் -உனக்காக-


***வான்கொண்ட நிலவிற்கு
மூன்றாம் பிறை மட்டும் அழகு !
நான் கொண்ட காதலிற்கு
நீ மட்டுமல்ல , உன் நிழல் கூட அழகு!


***அழவைப்பது அவள் என்று
தெரிந்தும் அடம் பிடிக்கிறது...
என் கண்கள் ...அவளைத்தான்
காண்பேன் என்று !


***பிரிவை தாங்கமுடியவில்லை !
தயவு செய்து பேசாதே
"உதடுகள்"


***இறப்பதற்கு ஒரு நொடி
துணிச்சல் போதும்...
ஆனால்
வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும் !!!


***பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன் ...
உன்னை பிரிய கூடாது என்று....
பிரியும் போதெல்லாம் நினைக்கின்றேன்
உன்னை ஏன் பார்த்தேன் என்று !!!


***போகும் போதே
ரசித்து விட்டு போ
திரும்பி வந்தால்
இருக்காது
"வாழ்க்கை"


***நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்ணில் கனவுகள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றுமே என் நினைவில்
நீ இருப்பாய் !!!


***உண்மையான அன்பை
புரிந்து கொள்ளும்
ஒரு சந்தர்ப்பம்
"பிரிவு"


***கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை ...
இப்படிக்கு,,
"மெழுகுவர்த்தி"


***உன்னை நேசிக்க ஆரம்பித்த
நிமிடம் எனக்கு தெரியாது..
ஆனால் இனிமேல் வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்!!


***இரவு கண்ட கனவு
மறைந்து போகலாம்
ஆனால்
இதயம் தொட்ட உன் நினைவு
என்றும் மறைவதில்லை
என் இதயத்தில்...


***சாதிக்க நினைப்பவன் மட்டுமே
அதிகம் சோதிக்கபடுகிறான்!
பிறரை அதிகமாக
நேசிப்பவன் மட்டுமே
அதிகம் கயப்படுகிறான்!!!


***ஒரு பொண்ணு அழகாக இருப்பதால்
அவளை நீ
காதலிக்க வில்லை...
நீ காதலிப்பதால் தான்
அவள் அழகாகத் தெரிகிறாள்!!!


***அழகுதான்...
அவள் போட்ட
கோலத்தை விட
அதை சுற்றி இருந்த அவளின்
"பாதசுவடுகள்"



தமிழ் கவிதைகள் (படங்களுடன்)


மொழி...!!!
உலக மொழியின் கணக்கில்
தவறு உள்ளது
ஆம்,
உன் விழியின் மொழியை
அறியாத பேதைகளால்...!!!






உனக்கு தெரியாது
என் கண்கள் பேசியது உன்னிடம்
உன் இதயம் மறுத்தது மௌனமாய் உனக்கு தெரியாது
வலி என் உயிர்க்கு என்று ?


வில்லனாய் மேகம் ?
அவளை (நிலவு) பார்க்க
நினைத்தும் முடியவில்லை...!
விதியாய் மறைக்கிறது மேகம் ...!



பொட்டு...
நிலவுக்குள் ஓர்
நிலவு நெற்றின்
"பொட்டு...!"




நண்பர்கள்
நாம் மௌனத்தையும்
ரசிப்பவள்
தாய்....
நாம் மௌனத்தியில்
பேச முடியாமல் இருக்கும்
வார்த்தைகளை அர்த்ததையும்
புரிந்துகொள்பவர்கள் தான்
நண்பர்கள்


குழந்தையாக
நூறு வருடம் அல்ல
கோடி வருடம்
வழத்திட ஆசை
எனக்கு
என் அன்னை
மடியில்
குழந்தையாக

கோழை
என் கண்களுக்கு
கண்ணிர் சிந்த தெரியாது
ஏன் என்றால்?
ஏன் இதயத்திற்கு
வலிகளை தாங்க தெரியும்
வலிகளை மறைக்க இதயம் ,
பழகிகொண்டது
எவ்வளவோ முயன்றும்
என கண்ணீரை மறைக்க முடியவில்லை
அவளிடம்.....
என்ன செய்வது?
பெற்று எடுத்தவளுக்கு தெரியாத
அவள் உயிரை பற்றி
என்றும்
உன் முன்னால்
நான் கோழை தான்
என்பதில் பெருமை எனக்கு
அம்மா ...........

எது நட்பு ?
நீ செய்வது
தவறு என்று
தெரிந்தும்
என்றும் எதிலும்
உனக்கு துணையாகநிற்ப்பது


இவளுக்கு இவன்
என்றாவது ஒரு நாள்
இவளுக்கு இவன் பிடிக்காமல்
போகுமானால்
அந்த கனம் முன்பே
இவனின் மௌனம் நிரந்தரமாகட்டும்




மௌனம்
மௌனம்மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்,
அனுபவ சித்திரத்தை வடிக்கும் துகள்கள்
அனுபவத்திலும் பொருள் இல்லை யென்றாலும்
கற்றவை நிற்குமெனின், உன்னால் பிறர்க்கும்
அவரால் உனக்கும், கலக்கம் குறையும்......





உன் பாதையில்
எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்

எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?

உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்

நின்று விடாதே
திரும்பிப் பார்

வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...


என்னை விட...
என்னவள் தூங்கும்
நேரத்தில்.......
நிலவு!
மறைந்துக் கொண்டு
பார்க்கிறது
என்னை விட அவள்
அழகு என்று...!


மழையே
மழையே
உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏ தெரியுமா,
நா இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தா








நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்
நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்
நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்
என்னை நானாக பார்த்தது
நட்பு தான்
காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்
எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
அழகு, சிரிப்பு, அழுகை, தமிழ்

உன் அழகை கண்டேன்,
நெருங்கி வந்தேன்,
சிரித்தாய்.
தனி அறையில் நீயும், நானும்,
உன்னை ரசித்தேன்,
உன் பேச்சை ரசித்தேன்,
நீ விலகிச்செல்வதை ரசித்தேன்,
நீ நெருங்கி வருவதை ரசித்தேன்,
உன்னை கண்ணோடு கண்வைத்து
பார்த்து ரசித்தேன்,
உன்னை என் விருப்பப்படி
வரைந்து ரசித்தேன்,
உன்னுடன் விளையாடி ரசித்தேன்,

உன்னால்....

எனக்கு பிடித்த வார்த்தைகளில்
இருந்து அழுகையை எடுத்துவிட்டு
காதலை சேர்த்துக்கொண்டேன்